Saturday 4 February 2012

ஆள்வதா ? வாழ்வதா ?...!


  சமீபத்தில் வடகொரிய மன்னர் 2வது கிம்  ஜ்ஹோன்க்  இயற்க்கை எய்தினார் அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர் தொலைக்காட்சியிலே  அழுது புரண்ட மக்களை பார்த்த போது மனம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துபோனது  ஒரு நாட்டை ஆளும் மன்னன்மீது மக்களுக்கு இவ்வளவு மதிப்பா இவ்வளவு பாசமா ?என்று   நான் பிரமித்துப்போனேன் .
                   
      மன்னனென்றால் சாதரணமா ? இங்கே  தமிழ் மாநிலத்தை ஆண்ட அண்ணா இறந்தபோது இரண்டரைக்கோடி மக்கள் ஒன்றுதிரண்டு அழுது புரண்டு தங்களது சோகத்தை கொட்டித்தீர்த்தது அதேபோல் எம்.ஜி .ஆர் அவர்கள் இறந்தபோது லட்சக்கணக்கான மக்கள் துன்பத்திலே துவண்டுகிடந்தனர் இன்னும் அவர்கள் இதயத்தில் இருந்து இறக்கிவிடவில்லை இன்னும் இதய தெய்வமாக வணங்கி வருகிறார்கள் என்றுசொன்னால் எந்த அளவுக்கு அவர்கள் மக்கள் இதயத்தில் இடம் பிடித்திருக்கிறார்கள் என்பது நமக்கு தெளிவாகும் .
                   
                    ஆளுவது பெரிதல்ல ,மக்களின் மனங்களில் வாழ்வதே பெரிது !
என்பதை புரிந்துகொண்டிருக்கிறார்கள்        
                        
     வடகொரிய மன்னரும் இதுபோல் வாழ்ந்து வந்தவராய் இருந்திருப்பார் என்று என்மனமும் கலங்கி கண்ணீர் வடித்தது !.
                              
                        ஆனால் ஒருவாரம் கழித்து தென்கொரிய அரசு 2வது கிம் ஜ்ஹோன்க் மரணத்திற்காக மக்களை அழுவதற்கு கட்டாயப்படித்திருக்கிறது என்றும் ,யார் ,யார் சரியாக அழவில்லை என்பதை கண்டறிந்து அவர்களுக்கு ஆறுமாத காலம் ஒரு குறிப்பிட்ட முகாமில் உழைக்க வேண்டும் என்ற தண்டனையை வழங்க இருப்பதாக பத்திரிகை செய்தி வெளியானதை கண்டபோது நான் அதிர்ந்துபோனேன் வெட்கப்பட்டேன் 
    
                            இவர்கள் ஹிட்லரை மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறதே!
ஆண்டுகள் பல அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்பதை அறியவில்லையா !
                                 
        முடிசான்ற மன்னரானாலும் முடிவிலொரு பிடி சாம்பலாகிப்போவார் என்பதை அறியாதவர்களா?
                                 
         முல்லைக்கு தேரையே கொடுத்த மன்னர்களும் இருக்கிறார்கள் !
                                  
                          மக்களை அடக்கி ஆள்வதில் பயனொன்றும் இல்லை அவர்கள் மனங்களை மடக்கி தமக்குள்ள அடக்கிக்கொள்ளவேண்டும் அப்போதுதான் மக்களின் மனங்களில் மரணத்திற்குப் பின்னும் வாழமுடியும் 
                                  வாழ்ந்தால் வாழ்த்தும் தலைமுறை ! 
                                                                   
                                                                     வாழ்க !  

No comments:

Post a Comment