Saturday 18 February 2012

நம்பினார் கெடுவதில்லை

ஒரு நாள் ஆலய தரிசனம் செய்துவர ஆசைப்பட்டு குடும்பத்துடன் திருத்தணி முருகன்கோவில் புறப்பட்டோம் அதிகாலை மூன்று மணியளவில் வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வடபழனியில் இருந்து கிளம்பினோம் திருத்தணி முருகனை தரிசனம் செய்துமுடித்து வெளியில் வந்தபோது காலை ஆறரை மணிதான் ஆகி இருந்த்தது
                                     கடைவீதியில் குழந்தைகளுடன் வந்துகொண்டிருந்தபோது ஒரு பெண் அப்பொழுதே திருமணமான நிலையில் கழுத்தில் மங்களகரமான தாலியுடனும்,மலர்மாலயுடனும் வந்துகொண்டிருந்தாள் அவளுடன் யாரும் வரவில்லை அவளுக்கு முன்னால் ஒரு பெரியவர் நடந்துகொண்டிருந்தார்
                                     அப்பொழுதுதான் நான் அவளது முகத்தை ஏறிட்டுப்பார்த்தேன் அடடா என்ன அழகு ,மஞ்சள் நிறத்தழகி, மங்கள முகத்தழகி ஆனால் அவள் அழுதுகொண்டே சென்றால் !அவள் அவ்வாறு சென்றது என் மனத்தில் மிகுந்த வேதனையை உருவாக்கியது என் குழந்தைகளை அழைத்து அவளின் நிலைக்காக வருந்தி விட்டு, வாகனத்தில் ஏறி புறப்பட்டோம்.மலையில் இருந்து இறங்கும் இறக்கமான சாலையில் வந்துகொண்டிருந்த போது எங்கள் வாகனத்தை ஒரு இருசக்கர வாகனம் கடந்தது ,அதிலே அந்தப்பெண் அமர்ந்து அழுதுகொண்டே சென்றாள்!.நான் என் மனைவியிடம அவளப்பற்றி சொல்லிமுடுக்கும்முன்னே ;ஐயோ!நான் மட்டுமல்ல அனைவரும் அலறிவிட்டோம் அவள் ஓடும் வாகனத்திலிருந்து இறங்க முற்ப்பட்டு கீழே விழுந்தால் எங்கள் வாகனம் அவள்மீது மோதிவிட்டது என்றே நினைத்தோம் !இறைவன் அருளால் அது நடைபெறவில்லை .எல்லோரும்வாகனத்தை விட்டு இறங்கிஓடினோம் இருசக்கர வாகனத்தை ஓட்டியவரும் எங்களுடன் வந்து அந்த பெண்ணை தூக்கி ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்தோம்
                                     அவள் தாய் ,தந்தை ஆகியவர்களுக்கு தெரியாமல் தனக்குப்பிடித்த ஒருவரை திருமணம் முடித்திருப்பார் என்று எண்ணியபடி முருகன் இடம் அவளுக்கு நல்ல அமைதியை தர வேண்டிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம் அனால் மனம்முளுக்க அந்தப்பெண்ணின் நினைவுதான் .
                                       எதோ ஒரு கவலையுடன் வீடுதிரும்ப விரும்பாத என்மனைவி
திருப்பதிசென்றுவரலாம் என்று சொல்ல நான் திருப்பதிக்கு ஒருநாளில் சென்று வர இயலாது என்று வாதிட்டேன் என்றபோதிலும் மனைவியின்பிடிவாதத்தாலும் அவர் ஒரு பெருமாள் பக்தை என்பதாலும் முயற்ச்சித்துப்பார்ப்போம் என்று முடிவெடுத்து புறப்பட்டோம் .
                                          கோவிலை நெருங்கியபோது நுழைவுசீட்டு குடுக்கும்நேரம் முடிவடயப்போகிறது என்றுசொல்லி அவசர ,அவசரமாக ஓடினோம் அனால் எதிர்பார்த்தது போல் நுழைவுச்சீட்டு வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது இலவச தரிசன வரிசை மிகநீண்டு இருந்தது அதிலே சென்றால் சாமிதரிசனம் எப்படியும் இரண்டு நாளாகும் என்பதை உணர்ந்த நான் மனைவியிடம் கோவில் வெளிப்பகுதியில்இறைவனை நினைத்து  சுற்றிவிட்டு செல்லலாம் என்று சொன்னேன் என் மனைவியோ ,நீங்கள் எல்லாம் ஊருக்கு திரும்பி போங்கள் நானேத்தனைனாலானாலும் இருந்து பார்த்துவிட்டுத்தான் வருவேன் என்றார் !
அவர் விருப்பப்படி அவருடன் இருந்துவரவும் என்னால் முடியவில்லை அலுவலகப்பணி தலைக்குமேலிருக்கிறது,எடுத்துசொல்லியும் அவர் கேட்கவில்லை அவர் :பெருமாள் என் அப்பன் எனக்கு காட்சி தருவான் அவனைபக்காம நான் வருவதாயில்லை என்று நம்பிக்கையுடன் அங்கேயே நின்றுகொண்டிருந்தார் எனக்கு ஒன்றும் புரியவில்லை
                                           எதிரில் முக்கியச்தர்களுக்கான நுழைவுச் சீட்டு வழங்கிக் கொண்டிருந்தார்கள் ஒரு நபருக்கு ரூபாய் முன்னூறு நாங்கள் பணம்கொடுக்க தயாராக இருந்தோம் ஆனால் அங்கே முக்கியஸ்தர்களாக இருக்க வேண்டும்
அல்லது முக்கியஸ்தர்களது சிபாருசு இருக்கவேண்டும் நாங்கள் வெளிமாநிலத்தில் போய் முக்கியஸ்தர்களின் சிபாரிசுக்கு எங்கே போறது என்று மனைவியிடம் சொன்னபோது அவர் மீண்டும் எனக்கு அப்பன் பெருமாள் காட்சி தருவான் அதற்க்கு ஏதாவது வழிசெய்வான் என்று மீண்டும் ,மீண்டும் உறுதியோடு சொல்லிக்கொண்டிருந்தார் .
                                           நான் என்ன செய்வது என்று குல்ம்பிக்கொண்டிருந்தபோது
யாரோ என் தோளைதொடுவது கண்டு திரும்பிப் பார்த்தேன் அங்கே ஒரு தெலுங்கர் அவர் என்ன பேசுகிறார் என்று எனக்கு புரியவில்லை அவர் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார் அனால் அவரிடம் உள்ள ஒரு சீட்டைகான்பித்தார் அதில் ஆந்திரா மாநிலத்து எம்>எல்>ஏ ஒருவரது சிபாரிசுக்கடிதம் அதிலே பத்து நபர்களுக்கு அனுமதி இருந்தது அந்தசீட்டை வைத்திருக்கும் அந்த நபர்கள் மொத்தம் நான்குபேர்கள் மட்டுமே இருக்கிறார்கள் மீதம் ஆறு நபர்கள் வரலாம் நீங்கள் எத்தனைபேர்கள் இருக்கிறீர்கள் எங்களுடன் வருவதாய் இருந்தால் வரலாம் என்று சொன்னார் என்ன ஆச்சர்யம் !நாங்கள் ஆறுபேர்கள் இருந்தோம் நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே போனோம்
                                       எனக்கு என்னவோ இறைவன் நேரில் வந்து அழைத்துபோனதுபோல்தான் இருந்தது என்மனைவி நம்பிக்கையோடு சொன்ன வார்த்தைகள் அதற்கு ஏற்றாற்போல் எங்களுக்கு தேவையான ஆறு நுழைவுச் சீட்டுக்களுடன் ஒருவர் வந்து அழைத்தது
                                     : நம்பினார் கெடுவதில்லை
                                       நான்குமறை தீர்ப்பு :...........என்பதை எண்ணி  மகிழ்ந்தபடி தரிசனம் முடித்து  கீழிறங்கி அலமேலுமங்காபுரம்   ,காளகஸ்தி ஆகிய தெய்வ ஸ்தலங்களையும் தரிசனம் செய்துவிட்டு மிகமகிழ்ச்சியுடன் இரவு ஒன்பது மணியளவில் வீடுவந்து சேர்ந்தோம் .
                                     




                                                                 மகிழ்ச்சி !              

No comments:

Post a Comment